வங்கக்கடலில் குலாப் புயல் உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்

173 0

வடமேற்கு திசையை நோக்கி நகரும் குலாப் புயல் ஒடிசா-ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

* வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கிறது.

* காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.

* ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்.

* புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்படுகிறது.

* வடமேற்கு திசையை நோக்கி நகரும் புயல் ஒடிசா-ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.