வைத்தியசாலையில் கைக்குண்டு; மற்றொரு நபர் கைது

173 0

நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையின் கழிவறையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் நேற்று(24)  கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் 22 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டதாகவும், இவரை திருகோணமலையில் வைத்து கைது செய்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும், பிரதான சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலையடுத்தே இவர் கைதாகி உள்ளார்