அக்டோபர் 1 ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும்!

185 0

எதிர்வரும் 1 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கனை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதால், ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க வழிகாட்டலின் அடிப்படையில், மாவட்டங்களுக்கு இடையே ரயில்கள் இயக்கப்படும் அல்லது மாகாணங்களுக்குள் இடையேயான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரான தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டவுடன் ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிதற்கான வழிகாட்டல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து துறைகளின் செயற்பாடுகளுக்கும் அவர்களுக்கு ஆதரவு தேவைப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.