அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அப்பர் கலஹா தோட்ட மக்கள் கோரிக்கை

210 0

அடிப்டை வசதிகளின்றி பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கேட்பாரற்ற நிலையில் வாழ்வதாக கண்டி – அப்பர் கலஹா தோட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

45 குடும்பங்கள் உள்ள இந்த பகுதியில் இருப்பிட வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் மலசலக்கூட வசதி உள்ளிட்ட அடிப்படை வசிதகள் இல்லாமல் பெரும் அசௌகரியத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக அப்பகுதிவாழ் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் தலையீடு செய்து தங்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க முன்வர வேண்டுமென அப்பகுதிவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்