சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் அக்டோபர் இறுதிக்குள் நிறைவடையும் – சுகாதார அமைச்சர்

178 0

சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டமானது அக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வானது இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இவ் உத்தியோகபூர்வமாக நிகழ்வில் உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.
இன்று அனுராதபுரம் மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளிலும் சிறுவர்களுக்கு தடுப்பூசி
வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதான வைத்தியசாலைகளில் விசேட மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கொழும்பிலுள்ள பல வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கு தடுப்பூசி
வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.