சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் மேலதிக விசாரணைக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

157 0

வெளியிடப்பட்டிருக்கும் 2020 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தேவைப்படுமாக இருந்தால் கீழ்வரும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்கம் அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் 011 2 784 208, 011 2 784 537, 011 3 140 314 என்ற இலக்கங்களுக்கோ அல்லது 1911 என்ற துரித இலக்கத்துக்கோ அழைத்து தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

2020 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் இணையத்துக்கு வெளியிடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் இலங்கை பரீட்சை திணைக்களத்தின்  www.doenets.lk அல்லது  www.results.exams.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு சென்று பரீட்சாத்தியின் பரீட்சை சுட்டெண்ணை செலுத்துவதன் மூலம் பெறுபேற்றை பெற்றுக்கொள்ளலாம்.

இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 6,22,352 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் பாடசாலை மட்டத்தில் 4,23,746 விண்ணப்பதாரிகளும்  தனிப்பட்ட  ரீதியில்   1,98,606 விண்ணப்பதாரிகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது