தடுப்பூசி போடாததால் 89% இறப்புகள் பதிவு

187 0

வவுனியாவில், கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களில் 89.25
சதவீதமானவர்கள், தடுப்பூசியின் ஒரு டோஸினையும் செலுத்தியிருக்கவில்லை என்று,
சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவலடைந்து வரும் நிலையில், வவுனியாவில் அதிகமான இறப்புகள்
பதிவாகியுள்ளன.

அந்தவகையில், இந்த மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள், கொரோனா
தொற்றால் மரணமடைந்தவர்களில் 89.25 சதவீதமானவர்கள் தடுப்பூசி எதனையும்
பெற்றுக்கொள்ளாததுடன், 10.75 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸை மாத்திரமே
செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட எவரும் இதுவரை
உயிரிழக்கவில்லை என்று, சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.