யாழில் உயிரிழந்த மூவருக்கு கொரோனா தொற்று

207 0

யாழ். மாவட்டத்தில் உயிரிழந்த மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சுப்பிரமணியம் ஜெகதீஸ்வரன் (வயது-70), அரியமலர் குணரட்ணம் (வயது 66) ஆகியோருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த ஏ.இராசதேவி (வயது 58) என்பவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.