தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்வது குறித்து ஆராய பசில் ராஜபக்ஷ – ரவூப் ஹக்கீம் நியமனம்

172 0

தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்வது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் உறுப்பினர்களாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 101 ஏற்பாடுகள் மற்றும் பாராளுமன்றத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய தேர்தல், வாக்கெடுப்பு முறை மற்றும் சட்டதிட்டங்களில் திருத்தங் களை மேற்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.