2015 கிலோ மஞ்சள் 30 கிலோ ஏலம் மீட்பு!

174 0

கிளிநொச்சி, பூநகரி, கௌதாரிமுனையில் வெட்டுக்காடு பகுதியில் 2015 கிலோ 600 கிராம் மஞ்சள் மற்றும் 30 கிலோ 100 கிராம் ஏலக்காயும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சூட்சுமமான முறையில் கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு வெட்டுக்காடு பகுதியில் உள்ள சிறு காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட தகவல், இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்ததை அடுத்து பூநகரி பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது கௌதாரிமுனை வெட்டுக்காடு பகுதியில் 2015 கிலோ 600 கிராம் மஞ்சள் மற்றும் 30 கிலோ 100 கிராம் ஏலக்காவும் மீட்கப்பட்டுள்ளதோடு, 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கடத்தல் சம்பவம் நேற்று (22) பிற்பகல் 2.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதோடு, மீட்க்கப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கிளிநொச்சி நீதிமன்றில் இன்று (23) முட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.