அமெரிக்காவில் பள்ளிக் கூடங்கள் திறந்த நிலையில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், பிற எந்த நாடுகளையும் விட, வல்லரசு நாடான அமெரிக்கா மிக மோசமாக பாதித்துள்ளது.