கொவிட் குறித்து தேவையற்ற அச்சங்களை மருந்து நிறுவனங்கள் உருவாக்கினன

180 0

கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் குறித்த தேவையற்ற அச்சங்களை பாரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் உருவாக்கின என அமைச்சர் டலஸ் அலகபெரும மாத்தறையில் தெரிவித்துள்ளார்.

தங்கள் நலனை முன்னெடுப்பதற்காக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்தன என அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் சாதாரண கண்களிற்கு தெரியாது ஆனால் அதனை ஒரு வெடிக்கும் பொருள் அல்லது மாயத்தோற்றம் போன்று சித்தரித்து மக்கள் மத்தியி;ல் அச்சத்தை ஏற்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.