ஓமந்தையில் ஆலயத் திருவிழாவில் பங்கேற்ற 11 பேருக்கு கொரோனா

183 0

வவுனியா ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பலர் தனிமைப்படுத் தப்பட்டனர்.

குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்று வருவதுடன் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர் என சுகாதாரத் தரப்பினருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த ஆலயத்துக்கு நேற்று முன்தினம் சென்ற சுகாதாரப் பிரிவினர் அங்கு நின்றிருந்தவர்களுக்கு அன்டிஜென் பரிசோதனையை முன்னெடுத்தனர். இதன்போது ஆலயக் குருக்கள் உட் பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த நபர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கு நேற்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று உறுதியானவர்கள் அவர்களது குடும்பங்களுடன் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.