நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் துசான் குணவர்த்தன பதவி விலகல்

316 0

நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் துசான் குணவர்த்தன தனது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் லசந்த அலகியவண்ணவிற்கு அனுப்பிவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோசடியில் ஈடுபடுபவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அரசாங்கம் செயற்படுகின்றது என நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் துசான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான அரசியல் அழுத்தங்கள் காரணமாக தன்னால் தொடர்ந்தும் சுதந்திரமாக பணியாற்ற முடியாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல பொருட்கள் சந்தையில் மோசடியான முறையில் விற்பனை செய்யப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் அரசாங்கம் மோசடிக்காரர்கள் விரும்பிய விதத்தில் செயற்படுகின்றது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதற்கு எதிராக செயற்பட்டமைக்காக தனக்கு மரண அச்சுறுத்தல் வந்ததது என அவர் தெரிவித்துள்ளார்.