போலி நகைகளை அடகு வைத்து மோசடி- கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் ஆய்வு

170 0

திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள நகைகளை அதிகாரிகள் மறு மதிப்பீடு செய்து வருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சிலர் தரம் குறைவாக போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் பீமாரப்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தனது உறவினரின் நகையை வைத்து மல்லசமுத்திரம் தொடக்க வேளாணமை கூட்டுறவு கடன் வங்கியில் 2 வளையல்களுக்கு கிராமுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் ரூ. 66 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.