ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- விஜய் வசந்த் எம்பி வழங்கினார்

148 0

பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்ட் சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் மருத்துவ உதவித் தொகை வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபத்தில் பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்ட்  சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் மருத்துவ உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி பொன்னரசி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்புரையாற்றி ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் மருத்துவ உதவித் தொகையை வழங்கினார்.
பிருந்தாவன் தொண்டு நிறுவன அறக்கட்டளை இயக்குனர் காட்சே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட சமூக நல அலுவலர்  சரோஜினி, மாவட்ட கல்வி அலுவலர் மோகனன், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் ரெத்தினகுமார், பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ஹனுகுமார், தக்கலை வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், பிருந்தாவன் அறக்கட்டளை சமூக தலைவர் ஜெயகுமாரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.