14 வயது சிறுவன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

176 0

மன்னார் இலுப்பக்கடவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கள்ளியடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 14 சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இதேவேளை இந்த சிறுவனை நேற்று மில் உரிமையாளரும் சிலரும் தாக்கிய சம்பவம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட சிறுவன் மில்லொன்றிற்கு நேற்று சென்றுள்ளான்,சிறுவன் வீடு திரும்பிய பின்னர் மில் உரிமையாளரும் சிலரும் அவனது வீட்டிற்கு வந்து சிறுவன் பணத்தை திருடிவிட்டான் என குற்றம்சாட்டி தாயின் முன்னால் வைத்து சிறுவனை மூர்க்கதனமாக தாக்கியுள்ளனர்.

தாய் மகனை தாக்கவேண்டாம் என மன்றாடியவேளை அவர்கள் தாயையும் தாக்கியுள்ளனர். இதற்கு சிறிதுநேரத்தின் பின்னர் மகன் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.

இதேவேளை தனது மகனின் மரணம் குறித்து தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் மகனை கொலை செய்துள்ளது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.