விவசாயிகள் போராட்டம் நடத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படும்

191 0

இரண்டு வருடங்களுக்குள் நெல்லின் அதிகபட்ச விலை 25 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இத்தகைய பின்னணியில் விவசாயிகள் போராட்டம் நடத்த தயாராக இருந்தால், வர்த்தக அமைச்சரின் தலையீட்டில் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

விவசாய அமைச்சில் நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“விவசாய அமைச்சராக, நான் இந்த அரிசியை இறக்குமதி செய்வதை நிறுத்தி வைத்துள்ளேன். எனவே, விவசாயிகள் நெல்லை விற்காவிட்டால், அரசு அரிசியை இறக்குமதி செய்யலாம்.”