அடுத்த வாரம் முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி

244 0

இலங்கையில் அடுத்த வாரம் முதல் விசேட தேவையுள்ள சிறுவர்களுக்கு ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கூற்றுக்களின்படி 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு மூன்று கட்டங்கள் அடிப்படையாக கொவிட்-19 தடுப்பூசி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் நாள்பட்ட நோய்கள் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாம் கட்டத்தில் உயர்தரம் மற்றும் சாதாரண தரம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

மூன்றாவது கட்டத்தில் மீதமுள்ள குறிப்பாக 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.