யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!

173 0

கஹடகஸ்திகிலிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவௌ பகுதியில் யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது

ஈத்தல்வெட்டுனுவௌ – கொக்கபே அணைக்கட்டு பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 54 வயதான ஒருவரே மரணித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கஹடகஸ்திகிலிய பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹடகஸ்திகிலிய காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.