வவுனியாவில் 35 பேருக்கு கொவிட் தொற்று!

193 0

வவுனியாவில் 35 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார அதிகாரி பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனை முடிவுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தொற்று உறுதியானவர்களை கொவிட்-19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.