மோசடி செய்பவர்களிடமிருந்து மணல் விநியோகத்தை நிறுத்த விசேட திட்டம் – மஹிந்த அமரவீர

184 0

மோசடி செய்பவர்களிடமிருந்து மணல் விநியோகத்தை நிறுத்தவும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மணல் உரிமம் வழங்கவும் விசேட திட்டமொன்று தயாரிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் இணையவழி ஊடாக நேற்று காலை நடைபெற்ற சிறப்பு கூட்டத்தின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் 300 மணல் அகழ்வு உரிமங்கள் வழங்கப்பட்ட போதிலும், கடந்த வருடம் 1,300 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்காலத்தில் இந்த நிலையை மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.