சட்விரோதமாக மாடுகளை கடத்திச் சென்ற இருவர் கைது!

188 0

வவுனியா குடாகச்சக்கொடிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்திச்சென்ற இருவர் விசேட அதிரடி படையினரால் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடத்தல் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,ஹொறவப்பொத்தானையில் இருந்து வவுனியா நோக்கி வருகைதந்த கப்ரக வாகனத்தினை குடாக்கச்சக்கொடிய பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது குறித்த வாகனத்தினுள் சட்டவிரோதமான முறையில் மாடுகள் கடத்தி செல்லப்பட்டுள்ளமை தெரியவந்தது.
குறித்த வாகனத்தில் இருந்த நபர்களை கைதுசெய்த விசேட அதிரடிப்படையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய கப்ரக வாகனத்தினையும் மாடுகளையும் மீட்டு காவற்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.