இலங்கையின் மருத்துவதுறை கொரோனா வைரசினை கட்டுப்படுத்தமுடியாமல் திணறுகின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
தனியார்நிறுவனமொன்று வழங்கிய 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மிகவேகமாக பரவும் டெல்டா வைரசினை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கையின் சுகாதார முறை திணறுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் இந்த தருணத்தில் இ;வ்வாறான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டமை உரிய தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மருத்துவமனைகள் உயிர்களை காப்பாற்றுவதற்கு பெரிதும் உதவியாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.