தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் அகவிலைப்படி உயர்வு அமல்- மு.க.ஸ்டாலின்

173 0

அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

தமிழக சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் பேசியமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கூறியதாவது:

* தமிழகத்தில்  அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல்  அமல்படுத்தப்படும்.

* அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட்டில் ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் ஜனவரியிலிருந்து அமல்படுத்தப்படும் என மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.