யாழில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றால் பலி

197 0

யாழ். மாவட்டத்தில் மேலும் 8 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட முதியவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 32 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். அவர் கொவிட்-19 தொற்றுடன் குழந்தை பிரசவித்து 10 நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொக்குவிலைச் சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஒருவரும் இருபாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் கொக்குவிலைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.

கைதடி அரச முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் 41 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட வர்களில் ஒருவர் நேற்று உயிரிழந்த அதேவேளை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்தார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்டஅன்டிஜென் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.

உடுவிலில் 74 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொவிட்-19 நோய்த் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவரது சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக் கப்பட்ட நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மின் தகனம் செய்யப்படும் என்று உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.