காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி) நிறுவுகின்ற விடயங்களை தவிர்ந்து எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளின் சங்கத்தின் ஆலோசகரான தாமோதரம் பிரதீபன் தெரிவித்தார்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றினை திங்கட்கிழமை (30) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை பாண்டிருப்பில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் மேற்கொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு சார்பாக காணப்படுகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் சார்பாக தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற கவனயீர்ப்பு பேரணி மற்றும் காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நீதி நிலைநாட்டல் தொடர்பிலான நிகழ்வுகளை இந்த நாட்டிலும் உலகத்திலும் கொரோனா அசாதாரண சூழலில் கூட அவற்றை தவிர்த்திருந்தாலும் ஒவ்வொரு உறவுகளும் தங்களது வீடுகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி வேணும் என்ற பிராத்தனைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.