நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் நாளை (01) மற்றும் நாளை மறுதினம் (02) திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் ஓகஸ்ட் மாதத்துக்கான முதியோர் கொடுப்பனவுகள் மற்றும் பிற பொது உதவி கொடுப்பனவுகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என தபால் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுப்பனவுகளைப் பெறும்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, தபால் அலுவலகங்களுக்கு வருமாறு, தபால் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.