யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகள் ஆகியவற்றில், கோவிட்-19 சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருpன்றன.
இந்த நிலையில், நேற்று (30) நிலைவரம் படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், 129 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்துடன், அங்கு அமைக்கப்பட்டுள்ள 2 அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில், 10 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ள நிலையில், தினமும் 5 சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அந்தச் சடலங்கள், கோம்பயன் மணல் மயானத்தில் சுகாதார விதிமுறைகளின் கீழ் எரியூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.