திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 15 பேர் சுயதனிமையில்

171 0

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குடாஓயா பிரதேத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட 15 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (30) இத்திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த 15 பேரும்  எச்சரிக்கப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.