அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை ரூ.1000 மட்டுமே வருவாயாக உள்ளது என்றும் மகளுக்கும், மகனுக்கும் 3 வேளை உணவுகூட வழங்கமுடியவில்லை என்றும் தந்தை வேதனையுடன் தெரிவித்தார்.
திண்டுக்கல் அருகே உள்ள புளியராஜக்காபட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் காளியப்பன். கூலித்தொழிலாளியான இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகாலட்சுமிக்கு கடந்த 1996-ம் ஆண்டு பிறந்த 3-வது குழந்தை பிறக்கும்போதே வினோத நோயால் பாதிக்கப்பட்டிருந்தது.