ரேவதி மீது திராவகம் வீசும்போது அவருடைய தாய் ஆராயி மீது பட்டதில் அவரும் காயம் அடைந்தார்.
சேலம் குகை ஜவுளிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 52). இவர் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (47). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் தகராறின்போது மனைவியை ஏசுதாஸ் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ரேவதி, பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார்.
இதற்கிடையில் அடிக்கடி தகராறு செய்து வந்த கணவன் ஏசுதாஸ் மீது புகார் கொடுப்பதற்காக நேற்று ரேவதி, தனது தாய் ஆராயி (65) என்பவருடன் சேலம் டவுன் போலீஸ் நிலையம் வந்தார்.
இந்த சம்பவத்தை பார்த்து பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் ரேவதி மீது திராவகம் வீசும்போது அவருடைய தாய் ஆராயி மீது பட்டதில் அவரும் காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் ரேவதி, ஆராயி ஆகியோரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் ஏசுதாஸ் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.