திருநெல்வேலியில் பயணதடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டோர் காவற்துறையினரால் விரட்டியடிப்பு!

165 0

நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்  பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் கோப்பாய் காவற்துறை பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பயணத்தடையினை மீறி  மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் இன்றையதினம் கோப்பாய் காவற்துறையினரினால் விரட்டப்பட்டனர்.

அவ்விடத்தில் மரக்கறி வியாபாரிகள் ஒன்றுகூடி விற்பனையில் ஈடுபடுவதனால் அவ்விடத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நிலைமை காணப்பட்டது காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்தகோப்பாய்  காவற்துறையினர் அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை     விரட்டினர்.