மஸ்கெலியா வைத்தியசாலையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரல்!-திகாம்பரம்

194 0

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையை பிரதேச மக்கள் உரிய வகையில் பயன்படுத்துவதற்கு தேவையான உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட தரப்பினரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நிஹால் வீரசூரியவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய, மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் ஊடாக பிரதேச மக்கள் முறையான வைத்திய சேவைகளை விரைவாக பெற்றுக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.