உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

181 0

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 துப்பாக்கிகள், 22 ரவைகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் ரம்புக்கனை பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 37 வயதான சந்தேக நபர் மீது ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.