திருக்கோவிலில் நடமாடிய 85 பேரில் 8 பேருக்கு கொரோனா!

210 0

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் அநாவசியமாக வீதிகளில் நடமாடிய 85 பேரை நேற்று சனிக்கிழமை (28) பொது சுகாதார பரிசோதகர்கள் காவல்துறையினருடன் இணைந்து பிடித்து அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக  திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் தெரிவித்தார்.

நாட்டில் ஊடரங்கு தனிமைபடுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை மீறி திருக்கோவில் பிரதேசத்தில் பொதுமக்கள் அநாவசியமாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் நடமாடி வருகின்றனர். இந்த சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடுவர்களை காவல்துறையினருடன் இணைந்து பொது சுகாதார பரிசோதகர்கள் பிடித்து வீதிகளில் வைத்து அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இவ்வாறு அநாவசியமாக வீதிகளில் நடமாடியவர்கள் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதி கண்டறியப்பட்டவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.