லிந்துலையில் மூன்று தினங்களில் 121 பேருக்கு கொரோனா!

196 0

லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடந்த மூன்று தினங்களில் 121 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் அபேகுணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியில் 225 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளிலேயே இவ்வாறு தொற்றுறுதியானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள், டயகம போப்பத்தலாவ, ஹோல்புறூக், மெராயா, இராணிவத்தை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இந்தநிலையில், தொற்றுறுதியானவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் அபேகுணரத்ன குறிப்பிட்டுள்ளார்.