இரு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளது!-கெஹலிய

207 0

நாட்டில் இரண்டு தடவைகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியை செலுத்தும் இலக்கை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 52 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.