நுவரெலியாவில் குடிநீர்த்தாங்கியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம்!

215 0

நுவரெலியா – பீட்ரூ தோட்டப்பகுதியை அண்மித்த பிதுருதலாகல பேணட் வனப்பகுதியில் உள்ள லவர்சிலீப் நீர்வீழ்ச்சி பகுதியிலிருந்து நேற்று (28) ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர பிரதேசங்களான ஹாவாஎலிய, மஹிந்த மாவத்தை, லவர்சிலிப் தோட்டம், பீட்ரூ தோட்டம் மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை ஆகிய பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பிரதான தண்ணீர் தாங்கியில் இந்த சடலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹாவாஎலிய பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நமசிவாயம் அமிர்தலிங்கம் (வயது 42) என நுவரெலியா தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த பிரதான தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இக் குடிநீரை பாவனையை தற்காலிகமாக நிறுத்தி கொள்ளுமாறு பிரதேச மக்களுக்கு விசேட அறித்தலும் விடுக்கப்பட்டுள்ளது