நாட்டில் இன்றையதினம் 4,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

166 0

நாட்டில் மேலும் 832 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 421,557 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றையதினம் 3,764 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று 4,596 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,203 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 355,394 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 57,580 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, மேலும் 214 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8,371 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.