பைத்தியங்களுக்கு பதில் சொல்ல முடியாது -இராஜ் வீரரத்ன

200 0
பிரதமர் பணியாற் தொகுதியின் பிரதமான யோஷித ராஜபக்ஷ, கன்னத்தில் அறைந்ததால்தான் தான் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்ததாக கூறப்படுவதை மறுத்த  பிரபல பாடகரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினருமான இராஜ் வீரரத்ன தெரிவித்தார்.

நல்லாட்சிக்கு எதிராக புதியதோர் ஆட்சியை கொண்டுவரவேண்டும் என்ற விருப்பத்தில் நானும் களமிறங்கி வேலைச்செய்தேன். அதனால் மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது. இன்னுமின்னும் மாற்றங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செய்வார் என நம்புகின்றேன். ஆனால், பைத்தியக்காரத்தனமான செயற்பாடுகளுக்கு தன்னால் பதிலளிக்கமுடியாது ஏனெனில், தான் அரசியல்வாதி இல்லை என்றார்.

ஜனாதிபதி இன்னும் கடுமையான தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.