இலங்கையின் ஒருநாள் உயிரிழப்பு 209ஐ தொட்டது.

198 0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பிலான 209 உயிரிழப்புகள் இன்று ஏற்பட்டதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில், கொரோனா பரவல் ஆரம்பித்ததிலிருந்து முதற் தடவையாக நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் தொடர்பிலான உயிரிழப்புகள் 200ஐ கடந்துள்ளன.

இதேவேளை, இதனுடன் இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 8,000ஐத் தாண்டி, 8,157ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 108 ஆண்களும், 101 பெண்களும் என்ற நிலையில் 30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் எவரும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டோர் 46 பேர் என்பதுடன், ஏனையோர் 60 மற்றும் அதற்கு மேற்பட்டோர் 163 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.