மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு, மானிய விலையில் வழங்கப்படும் டீசலின் அளவை அதிகரிக்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்று வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் டீசல் ஒரு லிட்டர் ரூ.66-க்கு விற்பனையானது. இது படிப்படியாக உயர்ந்து, நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.93.52-க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லமுடியாத நிலை உள்ளது.