தந்தை நட்டமடைந்து விட்டதால் முழு சம்பளத்தையும் வழங்க முடியாது- டிலான் பெரேரா

223 0

தனது தந்தை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்து நட்டமடைந்துள்ளமையினால் தன்னால் முழு சம்பளத்தையும் கொரோனா நிதியத்து அர்ப்பணிப்புச் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(25) செய்தியாளர்கள் மத்தியில் அவர் இதனை கூறியுள்ளார்.

“இன்று அரசியல்வாதிகள் பலரும் சம்பளத்தை கொரோனா நிதியத்திற்காக அன்பளிப்பு செய்கின்றனர். எனக்கு சம்பளத்தை முழுதும் அளிக்க முடியாது என்பதால் அரைச்சம்பளத்தை அன்பளிப்பு செய்கின்றேன்.

எனது தந்தையார் நிறுவனம் ஒன்றில் முதலிட்டதால் நட்டமடைந்தார். அதனால் இன்று முழுச் சம்பளத்தையும் நிதியத்திற்கு அளித்துவிட்டால் நான் பொருளாதார பக்கத்தில் சிரமத்தை எதிர்கொண்டுவிடுவேன்.

“தொழில் ரீதியில் நான் சட்டதரணி, எனினும் தற்போது வழக்குகளுக்கு செல்வதில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.