இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துல இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,995 ஆக அதிகரித்துள்ளது.