நாட்டை மூடுவதும் திறப்பதுமாக இருக்க முடியாது-GMOA

147 0
தற்போது அரசாங்கத்தினால் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் உரிய வகையில் கடைப்பிடிக்காவிடின் குறித்த ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டி ஏற்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த இதனை தெரிவித்திருந்தார்.

தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரரை முறையாக செயற்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அப்படி இல்லையாயின் தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டி ஏற்படும். இல்லை என்றால் மீண்டும் ஒரு மாதத்தில் ​நாட்டை முடக்க வேண்டி ஏற்படும். அப்படியாயின் திறப்பது…. மூடுவது… இவ்வாறு இருக்க முடியாது.