தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காக மிக நீண்ட காலமாகச் செயற்பட்ட கௌரி சங்கரி

212 0

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காக மிக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்திருந்த சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம் என சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இவர் ஆரம்ப காலங்களில் தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை போன்ற முக்கியமானவர்களின் வழக்கு விவகாரங்களில், ஆட்சியாளர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல்களையும் மீறி துணிவோடு நீதிமன்றப்படி ஏறி வழக்காடிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.ரி.தவராசாவுக்கு எப்போதும் பக்க பலமாக நின்று சட்ட ஆலோசனைகள் உட்பட பல்வேறு வழிவகைகளிலும் உதவி வந்திருக்கின்றார்.

உயர்நீதிமன்றில் அரசமைப்பு தொடர்பான மிக முக்கிய வழக்குகளை முன்னின்று நெறிப்படுத்தியதன் ஊடாக தனது சட்டப்புலமையையும் வாதத்திறமையையும் இவர் பறைசாற்றி வந்திருந்தார்.