கச்சத்தீவை மீள பெற மத்திய அரசாங்கம் தலையீட வேண்டும் – பழ.நெடுமாறன்

494 0

paஇலங்கையிடம் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீள பெற்று கொள்ள இந்திய மத்திய அரசாங்கம் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் செய்தியாளர் மத்தியில் உரையாற்றிய உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கச்சத்தீவு உடன்படிக்கை மீறப்படுவதன் காரணமாக தமிழக கடற்றொழிலாளர்கள் பல்வேறுப்பட்ட அளெகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
கச்சத்தீவு உடன்படிக்கைக்கு அமைய தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுதல் மற்றும் வலைகளை உலர வைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட முடியும்.
ஆனால் அந்த செயற்பாடுகளை தற்சமயம் மேற்கொள்ள முடியாதுள்ளதாக பழ நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.