இலங்கை மதுவரி திணைக்களத்திலும் கொரோனா!

181 0

இலங்கை மதுவரி திணைக்களத் தலைமையகத்தில் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அதன் 10 பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரி திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

செயற்பாட்டுப் பிரிவு, ஆராய்ச்சிப் பிரிவு, கணக்கியல் பிரிவு, கணினிப் பிரிவு மற்றும் சட்டப்பிரிவு உட்பட 10 பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.

கொவிட் அபாயத்தின் மத்தியில் இலங்கை மதுவரி திணைக்கள தலைமையகத்தின் பல பிரிவுகளின் நடவடிக்கைகள் குறைந்தளவு ஊழியர்களுடன் இயங்கி வருவதாக அவர் மேலும் கூறினார்.