யாழில் பல இடங்களில் பாண் விலையில் மோசடி

167 0

யாழில் பல இடங்களில் பாண் விலையில் மோசடி அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் நேற்று சில இடங்களில் பாணின் விலையில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்று தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் பாணின் விலை இன்னும் அதிகரிக்கப்படாத நிலையில், வீடுவீடாகச் சென்று வாகனங்களில் பாண் விநியோகம் செய்பவர்கள் 70 ரூபாவுக்கு ஒரு இறாத்தல் பாணை விற்பனை செய்துள்ளனர்.

எனவே இவ்வாறான மோசடிகளுக்கு எடுபடாமல் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்